ஞாயிறு, 9 மார்ச், 2014

அரிசியில் கல் பொறுக்கும் 
உன்னையும்
உன் கண்களையும் ஏமாற்றி
உன் பற்களுக்கு வரும்
ஏதோவொரு கல்
உனக்கென்னை 
ஞாபகப்படுத்தும்
-------
நான் நிற்கிறேன்
படுத்திருக்கிறது என் நிழல்
அரூபக் கோடாக 
நீளும் என் பார்வை
90 டிகிரியில் 
ஒரு முக்கோணத்தை 
வரைகிறது பாருங்கள்
ஜீன் 8 2013 
---------
முதலில் 
ஓடிவந்து விசாரித்தது 
கண்ணீர்தான்
அப்புறம் தான் 
நீ 
-------
சுட்டு வீழ்த்திய பறவையோ
மரம் உதிர்த்த மலரோ காண்பாயாக
நூலறுந்த நொடியில்
ஜீன் 2 2013

கருத்துகள் இல்லை: