விளக்கை அணைத்ததும்
திறந்த ஜன்னல் வழி
உள்நுழைந்த இருள். 
செப் 17 2013
தலைக்கேறிய போதையில்
கண்கள் அயர
இமைகள் சார்த்தி
ட்யூப் லைட்டை 
அணைத்துவிட்டேன்
வாசலுக்கு
 நேராக
அறைச் சுவர் ஒட்டி 
நின்றிருக்கும் ஆளுயர
நிலைக் கண்ணாடியில் 
கொட்டுகிறது
வீடு நனைக்காமல்
ஈரம் தீண்டாமல்
சோ வென்றொரு மழை. 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக