இதுதான்
 கடைசிமுறை
குறி தப்பினாலும் 
வேறு கல்லை கையிலெடுக்க 
அனுமதியில்லை
வீசுவதன்றி உபாயமெதுவுமில்லை
அதைப் பறக்கவிடுதல்
பிடித்துப்போகிறது 
இக்கணத்தில்.
செப் 12 
-----
இங்கு மேகமில்லை
இடியில்லை
மின்னலில்லை
தூறலில்லை
மழையில்லை
வானமுமில்லை.
-----
யானை என்பதென்ன?
பெரிய்ய்ய்ய உருவம். 
கருப்பே அதன் நிறம். 
தும்பிக்கை 
ஒன்றிருக்கும். 
அசைந்தபடி காதுமடல்கள் இரண்டு. 
தூண் கால்கள் நான்குண்டு. 
வெண் தந்தம் வளைந்திருக்கும்.
வாலொன்று தொங்கும். 
சின்னச்சங்கிலிக்கு 
கட்டுப்பட்டிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக