ஞாயிறு, 24 ஜூன், 2012

பலிபீடம்


உனக்கொரு கத்தியைப் பரிசளிக்கிறேன்

உன் வீட்டுக்கொல்லையில்
கோடையின் நகங்களில் பூத்துக் காய்த்துக் குலுங்கும்
மாமரத்தின் கிளிமூக்குகளைத்
துண்டாக்கிக்கொள்ள உதவுமது

படையலிடும் ஊதுபத்திப் பொழுதுகளில்
கறை கலக்காத வெண்சிரிப்பைப் பிளந்துகாட்டும்
நெத்துத் தேங்காயை உடைக்கத்
தோதாயிருக்குமது

கொலை செய்யும் பக்குவமேற்பட்ட பின்
மறந்துவிடாதே
உன் அலைபேசிக்குள் பதுங்கியிருக்கும்
என் பத்திலக்க எண்களை

கருத்துகள் இல்லை: