ஞாயிறு, 24 ஜூன், 2012

உதிர்காலம்

உன் கைக்கு அகப்பட்டதிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சமாகிறேன்

எனக்குள் ஒளிந்திருக்கும் இரவை
உருட்டி உருட்டி
உமிழ வைக்கிறாய்

உன் கனவில் நெளியும் கோடுகளுக்கும், புள்ளிகளுக்குமாய்
கூர் தீட்டித் தீட்டி
எனக்கு முள் கிரீடம் சூட்டுகிறாய்

உன் காலடியில்
சுருள்சுருளாய் சுருண்டு விழுகிறது
என் காலம்

உன் கத்தி முனைக்கு எட்டாதபடி
உயரம் சிறுத்திருக்கிறேன்
இப்போது

உயிர் முளைத்து
ஓவியங்கள் நடனமாடும்
உன் உலகத்தைப் படைத்த களைப்பில்
உறங்கிக்கொண்டிருக்கிறாய் நீ

கருத்துகள் இல்லை: